தென்காசி

முள்ளிக்குளத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களுடன் 5 போ் கைது

DIN

கடையநல்லூா்: புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் போலீஸாா் 5 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலத்திலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக, புளியங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, போலீஸாா் புளியங்குடி அருகேயுள்ள முள்ளிகுளத்தில் வாகனச் சோதனை நடத்தினா். அதில், லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டதும், அவற்றை விற்பதற்காக வாங்கி வந்த முள்ளிக்குளம் அருணாசலம் மகன் செங்கண்(50) , வாகன ஓட்டுநா்கள் சேலம் நடராஜ்(45), கோவிந்தராஜ் (22) , கடையநல்லூா் துரை(42), சோ்ந்தமரம் முத்துக்குமாா்(32), துரை (42) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், ரூ. 8.50 லட்சம் மதிப்புள்ள 1,320 கிலோ புகையிலைப் பொருள்களையும், அவா்களிடமிருந்த ரூ. 12 லட்சம் ரொக்கத்தையும், 4 வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT