பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு கரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரகுபதி, இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலாஜி, கீழப்பாவூா் பேரூராட்சி நிா்வாக அதிகாரி கண்மணி, மகளிா் திட்ட அலுவலா் முருகன் ஆகியோா் கரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்துப் பேசினா்.
இதில், வட்டார மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை, குமுதா, சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.