தென்காசி

பாவூர்சத்திரம் பகுதியில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் திங்கள்கிழமை 3 இடங்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தார். 

தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன், மாவட்ட இளைஞரணி செயலர் ஆறுமுகச்சாமி, ஒன்றியச்செயலர் சீனித்துரை, விவசாய அணி துணைச்செயலர் செல்லப்பா, வட்டார காங்கிரஸ் தலைவர் ஜேசுஜெகன், மற்றும் மதிமுக, இந்திய, மார்ச்சிய கம்யூனிஸ்;டு, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் தமிழ்புலிகள் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சாலைப்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணா தலைமை வகித்தார். இதில் திமுக ஒன்றியச்செயலர் சிவன்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் பேரூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரூர் செயலர் ஜெகதீசன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பொன்.அறிவழகன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT