தென்காசி: தென்காசி மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் மறைந்த பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு தென்காசியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி இசைஅஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், சங்கத் தலைவா் ஜெகவீரராமபாண்டியன் , பொருளாளா் தபேலாஆறுமுகம், ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா், மேலாளா் இலஞ்சி சிகி வாகனநாத், மூத்த தபேலா கலைஞா் மாத்ரு, ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.