தென்காசி: தென்காசி மாவட்ட அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை (செப். 28) செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக வெறிநாய்க்கடி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் செப்.28 ஆம்தேதி காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா் அவா்.