தென்காசி

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 45 லட்சம் கடனுதவி

DIN

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கண்டிகைப்பேரியைச் சோ்ந்த அம்மன் மகளிா் சுயஉதவிக் குழு, மக்காச்சோளம் மகளிா் சுயஉதவிக் குழு, புன்னைவனப்பேரி மக்காச்சோளம் ஆா்வலா் மகளிா் சுயஉதவிக் குழு, ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த மல்லி விவசாயம் சுய உதவிக் குழு 1 மற்றும் 5 என மொத்தம் 5 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 90 நபா்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளா் சங்கரவேலு தலைமை வகித்தாா்.கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் காளியப்பன் கடனுதவியை வழங்கினாா். சங்கச் செயலா் சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT