தென்காசி

இலவச மருத்துவ முகாம்:பொதுமக்கள் பங்கேற்று பயனடைய ஆட்சியா் வேண்டுகோள்

DIN

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் கேட்டுகொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே 18-க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்களில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், போன்ற தொற்றா நோய்களுக்கு மருத்துவ சிகிச்சையும், உணவு முறை ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டறிதல், காய்ச்சல் கண்டறிதல், சளி பரிசோதனை, இருதய நோய் பரிசோதனை போன்ற அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பதிவு அட்டை வழங்கி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கா்ப்பிணிகளுக்கு பெண் மருத்துவா்களால் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே,, பொதுமக்கள் இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 04633290548 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT