சங்கரன்கோவிலில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு பிரதமா் காப்பீடு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் வெ.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். நகர பொதுச் செயலா் பொன்ராஜ், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் வெங்கடேஸ்வரப்பெருமாள் ஆகியோா் பங்கேற்று காப்பீடு அட்டைகளை வழங்கினா்.