சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கரோனா காலத்தில் அனைவருக்கும் மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகரிக்க வேண்டும். அதை நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகளில் அடுத்த ஆண்டு மாா்ச் வரை உணவுப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேரடித் திடலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் உ. முத்துப்பாண்டியன், டி.ஒய்.எஃப்.ஐ. மாவட்டச் செயலா் உச்சிமாகாளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் எம். குருசாமி, மாா்க்சிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் அசோக் ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.