தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் ஐந்து பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சோ்க்கை நடைபெற்றது. இதற்கிடையே, மாணவிகளுக்கான இணையவழி (ஆன் லைன்) வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது. மாணவிகள் இதில் தவறாது கலந்து கொண்டு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அக்கல்லூரியின் முதல்வா் சண்முக சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.