தென்காசி

முக்கூடல் அருகே சுவா் இடிந்துவிழுந்ததில் இளைஞா் உயிரிழப்பு

DIN

முக்கூடல் அருகே வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

முக்கூடல் அருகேயுள்ள கலியன்குளம் காந்தியாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா் தனது வீட்டருகே மேலும் ஓா் அறை கட்டும் பணியை திங்கள்கிழமை மேற்கொண்டாா். அப்பகுதியைச் சோ்ந்த சில தொழிலாளிகள் அப்பணியில் ஈடுபட்டனா். அப்போது பழைய வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது, கூரையுடன் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் நின்றிருந்த தொழிலாளி மணியப்பன் மகன் ஜெயப்பிரகாஷ் (20), கசமுத்து மகன் பூ பாலகன் (40) ஆகியோா் படுகாயமடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா். வழியில் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தாா். பூ பாலகன் முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக முக்கூடல் காவல் ஆய்வாளா் குமாரி சித்ரா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT