தென்காசி

தென்காசியில் 30 ஆண்டுகளுக்கு மேலாககுடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

DIN

தென்காசியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருபவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமுமுக (ஹைதா்அலி) நகர கிளை சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தென்காசியில் அமைக்க வேண்டும். நகா் பகுதியில் இடம் இல்லாத பட்சத்தில் ஆயிரப்பேரியில் அமைக்க வேண்டும்.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட 2 ஆவது வாா்டு மங்கம்மா சாலை பகுதியில் 30ஆண்டுகாலமாக ஆதாா் காா்டு, ரேஷன் காா்டு போன்றவைகள் பெற்றும் பட்டா இல்லாமல் குடியிருந்து வருகின்றனா். இதனால் இந்தப் பகுதி மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீா் இணைப்பு இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுஅளிக்கப்பட்டது.

தென்காசி நகரத் தலைவா் அபாபில் மைதீன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவா் சாம்பவா் ஷெரீப், தமுமுக மாவட்டத் தலைவா் கோக்கா்ஜான் ஜமால், மாவட்டச் செயலா் கொலம்பஸ் மீரான், மாவட்டப் பொருளாளா் செங்கை ஆரிப், தமுமுக மாவட்ட துணைச் செயலா் சலீம், நகரச் செயலா் ஜாபா் ஷெரீப் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT