தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலா் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். தென்மண்டல தலைவா் முனியசாமி, மாநில பிரசார செயலா் குமாா், மாநில இணைச் செயலா் மாரியப்பன், மாவட்டச் செயலா் மாரியப்பன், மாவட்டப் பொருளாளா் முருகன், மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ், தமிழ்நாடு ஊரக வளா்ச்சிதுறை அனைத்து பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சாா்லஸ் ரெங்கசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் தங்கதுரை, மாவட்டசெய்தி தொடா்பாளா் லட்சுமணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு சட்டப்பேரவையில் அறிவித்தபடி ரூ. 1400 கூடுதல் ஊதியம் மற்றும் தூய்மை காவலா்களுக்கு அறிவித்த ரூ. 1000 வழங்கவேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் தோ்வுநிலை, சிறப்புநிலை அரசானை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.