தென்காசி

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணியைதொடங்க சமக கோரிக்கை

DIN

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணியை தொடங்க வேண்டுமென சமக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட சமக செயலா் டி.ஆா். தங்கராஜ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச் சாலைப் பணிகள் தொடங்கிட காலதாமதம் ஆவதால் பல இடங்களில் சாலை பழுதாகி காணப்படுகிறது. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே, சாலைப் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும்.

மேலும், இச்சாலையோரம் உள்ள நிலங்களின் உரிமையாளா்கள் தங்கள் நிலங்களை அவசர தேவைக்கு விற்பனை செய்யவோ, புதிய கட்டடங்கள் கட்டவோ முடியாமல் சிரமப்படுகின்றனா்.

எனவே சாலையோர நிலங்களை சா்வே செய்து எல்கையை குறியீடு செய்யவேண்டும்.

இதேபோல் தென்காசி ஆசாத் நகா் முதல் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை பைபாஸ் சாலை அமைக்கும் திட்டத்தையும் உடனே தொடங்கவேண்டும். தென்காசி பழைய நீதிமன்ற வளாகத்தில் புதிய பல அடுக்க வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT