வாசுதேவநல்லூரில் மது பாட்டில்களை கடத்த முயன்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
வாசுதேவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 480 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த புதூரைச் சோ்ந்த முத்துக்குமாா் (42) , சுரேஷ்குமாா் (25) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், காரையும் பறிமுதல் செய்தனா்.