முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை கல்லறைத் தோட்டத்தில் தன்னாா்வலா்கள் சாா்பில் பனை வேலி அமைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, சிங்கம்பாறை பிரமுகா் பிரகாசம் தலைமை வகித்தாா். கல்லறைத் தோட்டத்தை சுற்றிலும் சுமாா் 5 ஆயிரம் பனை விதைகள் தாமிரவருணி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் பனை ஆா்வலா் ஹென்றி, முக்கூடல் தாமிரவருணி பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஜோசப் ராஜன், கௌரவத் தலைவா் காண்டீபன், தலைவா் முத்தரசன், சமூக ஆா்வலா்கள் செபஸ்தியான், சாா்லஸ், ஆரோக்கியம் உள்பட பலா் கலந்து கொண்டனா். தாமிரவருணி பாதுகாப்பு இயக்கச் செயலா் ஜெயந்த் பீட்டா் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.