வீரவநல்லூா் பேரூராட்சியில், டெங்கு ஒழிப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
இப்பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் உபயோகமற்ற டயா்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையில்லாமல் நீா் தங்கும் பொருள்கள் அகற்றப்பட்டு கடைகள் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
செயல் அலுவலா் கு. பெத்ராஜ் தலைமையில் தூய்மைப்பணி ஆய்வாளா் பிரபாகா், மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.