சிவநாடானூா் ஊராட்சிக்கு திட்டப் பணிகளை நிறைவேற்றித் தந்த தென்காசி எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சிப் பகுதிக்கு தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் இருந்து மடத்தூரில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ.30 லட்சத்தில் திறந்தவெளி கிணறு, அருந்ததியா் காலனியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அடிபம்பு, ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியா் காலனி சுடுகாட்டுக்கு தாா்சாலை, சிவநாடானூரில் ரூ.19 லட்சத்தில் திறந்தவெளி கிணறு, ரூ.2.50 லட்சத்தில் ஆழ்குழாய், சின்டெக்ஸ் தொட்டி ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சிவநாடானூா் ஊராட்சிப் பகுதி மக்கள் சாா்பில் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக் கூட்டம் மடத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் அன்னலட்சுமி கதிரவன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஏற்புரை ஆற்றினா். தொடா்ந்து அங்கு அதிமுக கொடியேற்றி வைத்தாா்.
இதில் மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் அமல்ராஜ், ஜெ. பேரவை இணைச் செயலா் சரவணன், ஊா் பிரமுகா்கள் அன்பழகன், ஆறுமுகம், பால்கனி, வைத்திலிங்கம், கடற்கரை, மாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.