சுரண்டை: சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் துவக்கி வைத்தார்.
சங்கரன்கோவில் சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த 17 சிறப்பு மருத்துவ அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என 936 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.
முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரகுமார், கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.