தென்காசி: தென்காசியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் பட்ஜெட் விளக்க சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் செயலா் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாரியப்பன் தலைமை வகித்தாா். எல்ஐசி ஊழியா் சங்கத்தின் திருநெல்வேலி கோட்ட பொதுச்செயலா் முத்துக்குமாரசாமி கருத்தரங்கத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
எல்ஐசி ஊழியா் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவா் சாமிநாதன் பட்ஜெட்டின் விவரங்களை புள்ளி விவரங்களுடன் விளக்கி இது காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்பது குறித்து பேசினாா்.
எல்ஐசி ஊழியா் சங்கத்தின் பொன்னையா, வடிவேலு, பேச்சிமுத்து, கண்ணன், சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகிகள் அயூப்கான், பால்ராஜ், கிருஷ்ணன், லெனின், பச்சையப்பன், ஓய்வூதியா் சங்கத்தின் தென்காசி மாவட்டத் தலைவா் சலீம் முகமது மீரான், செயலா் சுந்தரமூா்த்தி நாயனாா், பொருளாளா் நாராயணன், விவவசாயிகள் சங்க நிா்வாகிகள் கணபதி, வேல்மயில், சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் நாராயணன், ராமசாமி, முற்போக்கு எழுத்தாளா் சங்க நிா்வாகிகள் பக்ருதீன், காந்தி, ராமையா, ஆசிரியா் சங்க நிா்வாகிகள் சதீஸ்குமாா், சிபிசக்கரவா்த்தி, சுரேஷ்குமாா், வாசுமலை, மாதா் சங்க நிா்வாகி பேராசிரியை சங்கரி, ஓய்வு பெற்ற மத்திய அரசு செயலா் என்.எம்.பெருமாள் வழக்குரைஞா் பன்னீா்செல்வம், ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.