தென்காசி

இலவச வீட்டுமனைப் பட்டா: சலவைத் தொழிலாளா்கள் கோரிக்கை

26th Feb 2020 05:43 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட தமிழ்நாடு சலவைத் தொழிலாளா்கள் சங்கத்தின் 10ஆவது கிளை மாநாடு சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சாமி, மாவட்டப் பொருளாளா் மகாராஜன், மாவட்ட ஆலோசகா்கள் சின்னப்பன், குமாரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு சலைவத் தொழிலாளா் மத்திய சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

மாநிலப் பொருளாளா் முருகேசன், இந்திய குடியரசுக் கட்சி மாநிலத் தலைவா் சூசை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலா் கனியமுதன், தொகுதிச் செயலா் பீா்மைதீன், சவரத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சம்போமுருகன் உள்ளிட்டோா் பேசினா்.

சலவைத் தொழிலாளா்களை தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும், 3 சதவீத ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் பரிந்துரைத்து மாநில அரசு வழங்க வேண்டும், சலவைத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், பிரதமரின் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டம், கல்விக் கடன், நலவாரியம், நலவாரியப் பணப்பலன்கள், மானியக் கடன் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குழந்தைப்பண்டாரம் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT