தென்காசி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

25th Feb 2020 05:54 AM

ADVERTISEMENT

 

தென்காசி: ஆய்க்குடி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தென்காசியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலா் கே.கணேசன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க ஆய்க்குடி கிளை செயலா் சரவணன் முன்னிலை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் முத்துசாமி, மாவட்ட துணைச் செயலா் எம்.கணேசன், முத்துசெல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா். பின்னா், ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

முதியோா் உதவிதொகை: இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா்க.மேனகா , விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.வெங்கடேஷ்,மாா்க்சிஸ்ட் கிளை செயலா் முருகன் மற்றும் மேலாம்பூா் ஊராட்சிக்குள்பட்ட கருத்தபிள்ளையூரை சோ்ந்த ஆதரவற்ற,வயதான பெண்கள்,முதியோா் உதவிதொகை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT