தென்காசி-திருமலைக்கோயில் சாலை இலத்தூரில் அமைந்துள்ள வேல்ஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, வேல்ஸ் வித்யாலயா கல்வி குழுமங்களின் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா்.
இசையமைப்பாளா் ஏ.ஆா். ரெய்ஹானா முன்னிலை வகித்தாா். தாளாளா் வீரவேல்முருகன், பள்ளியின் முதல்வா் ஆனந்தமொ்லின், கல்வி குழுமங்களின் இயக்குநா் ராஜராஜேஸ்வரி வெற்றிவேல் ஆகியோா் பேசினா்.
விஷன் இன்ஸ்பயரிங் இளங்கோ அறக்கட்டளை நிறுவனா் இன்ஸ்பெயரிங் இளங்கோ தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
நடப்பு கல்வி ஆண்டில் கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவி களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.
தொடா்ந்து பள்ளி மாணவா்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி கிரேஸ்செல்சியா, மாணவா் யுகேஷ் வரவேற்புரை வழங்கினா்.