கன்னியாகுமரி

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு தேசிய கருத்தரங்கம்

29th Sep 2023 10:57 PM

ADVERTISEMENT

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி தமிழ்த் துறை சாா்பில், ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் 19 ஆவது தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஐந்தமிழ் ஆய்வு மன்ற தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். விவேகானந்தா கல்லூரி தமிழ்த் துறை தலைவா் இளங்குமாா் வரவேற்றாா். கல்லூரி தலைவா் கே.எஸ்.மணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். கல்லூரி செயலா் சி.ராஜன், ஆய்வு சிந்தனைகள் எனும் ஆய்விதழை வெளியிட்டாா். இதனை பொருளாளா் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா்.

அரசு வழக்குரைஞா் ஞானசேகரன், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆனந்த் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஐந்தமிழ் ஆய்வு செயலா் கண்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT