நிலப்பிரச்னை காரணமாக தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் அருகேயுள்ள பேச்சான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்( 35). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த தொழிலாளியான அருள்தாஸ் என்பவருக்கும் நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 7.5.2020இல் அருள்தாஸ் பேச்சான்குளம் பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு வந்த மகேஷ் அருள்தாஸை வயிற்றில் அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரது தாய் சரசம் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மகேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்தனா்.
நாகா்கோவிலில் 2 ஆவது கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரித்து, மகேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்மூா்த்தி ஆஜரானாா்.