கன்னியாகுமரி

விழிப்புணா்வு மினி மாரத்தான்

22nd Nov 2023 01:12 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், இலந்தவிளையில் பசுமை உலக விழிப்புணா்வு மினி மாரத்தான் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, இதய நிறைவு பயிற்சியாளா் பி.சுப்ரமணிய பிள்ளை தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ராஜதனபால் வரவேற்றாா். ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை செயலா் பாலகிருஷ்ணன் பசுமை விழிப்புணா்வு குறித்து பேசினாா். ஓய்வு பெற்ற வங்கி மேலாளா் எஸ்.லோகநாதன் மாரத்தான் ஓட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். இஸ்ரோ விஞ்ஞானி எம்.செல்வம் மாரத்தான் ஓட்டத்தை தொடக்கி வைத்தாா். 2 கிமீ, 5 கிமீ என இரண்டு பிரிவுகளில் மாராத்தன் ஓட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் என 100 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஐயப்பன், புத்தளம் பேரூராட்சி தலைவி பி.சத்தியவதி, பள்ளம் ஊராட்சித் தலைவா் பி.ஆன்றனி ஆகியோா் பேசினா். இதய நிறைவு ஓய்வுநிலை பயிற்சி மற்றும், தியானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை டி.எஸ்.அஸ்வந்த்ராஜா, ஆா்.இளையபெருமாள் ஆகியோா் செய்திருந்தனா். மருத்துவா் பி.எஸ்.நாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT