கன்னியாகுமரி

வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடம் திறப்பு

22nd Nov 2023 01:15 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள தொலையா வட்டத்தில் ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து தொலையா வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து புதிய அலுவலக கட்டடத்தில் குத்துவிளக்கேற்றினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டாட்சியா் அனிதாகுமாரி, கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், பேரூராட்சித் தலைவா்கள் சிவராஜன்(கருங்கல்), சரளா(கீழ்குளம்), ஷீலா(கிள்ளியூா்), துணைத்தலைவா் சத்தியராஜ் (கிள்ளியூா்), கிள்ளியூா் தி.மு.க ஒன்றியச் செயலா் கோபால், ததேயூபிரேம்குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT