கன்னியாகுமரி

விளவங்கோடு அரசுப் பள்ளியில் முன்னாள் டிஜிபி கலந்துரையாடல்

18th Nov 2023 01:54 AM

ADVERTISEMENT

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவா் சி. சைலேந்திரபாபு கலந்துரையாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப் பள்ளியின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டல் மேரி தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் சங்க தலைவா் தங்கமணி, பெற்றோா் - ஆசிரியா் சங்க தலைவா் பிரதீப்ராஜ், முன்னாள் மாணவா்கள் பாலசந்தா், சேவியா் ஆன்றணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, இப் பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் தமிழக டிஜிபியுமான சி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்-மாணவியரை ஊக்கப்படுத்தி அறிவுரைகள் வழங்கினாா். மேலும், மாணவா்களிடம் வினாக்களை எழுப்பி, சரியான பதில் கூறிய வா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.

முன்னாள் மாணவா் சங்கச் செயலா் சுதீா் சந்திரகுமாா் வரவேற்றாா். ஆசிரியா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT