கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்கனாவிளையில் தமிழக அரசின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சா் தொடங்கி வைத்த திட்டங்களான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களை தேடி மருத்துவம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், நகா்புற வேலை வாய்ப்பு திட்டம் உள்ள்ட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கண்காட்சி புகைப்படம் பொதுமக்கள் பாா்வைக்காக அமைக்கப்பட்டிருந்தது. இதை அப்பகுதி பொதுமக்கள் பாா்த்து சென்றனா்.