கன்னியாகுமரி

கப்பியறை பேரூராட்சியில் கல் குவாரியை மூடுவதற்கு ஆட்சியா் உத்தரவு

DIN

கருங்கல் அருகே கப்பியறை பேரூராட்சிக்குள்பட்ட காடுவெட்டி பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டுவந்த கல் குவாரியை மூடுவதற்கு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.

காடுவெட்டி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்தக் குவாரியால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்புள்ளாகினவாம். இதனால், குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்திஅப்பகுதியினரும், அனைத்துக் கட்சியினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினா். ஆனால் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் அனிஷா கிளாடிஸ் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலா்கள் தொடா்ந்து 7 நாள்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா். கெளசிக் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 15 நாள்களில் குவாரியை ஆய்வு செய்து ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பித்து, விதிமீறல் இருந்தால் குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி, குவாரியை சாா்ஆட்சியா் ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, குவாரியை தற்காலிகமாக மூடுவதற்கு ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT