மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு சீனிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் வில்சன் மகன் விஜின் (28). நட்டாலம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தாா். சனிக்கிழமை அவா் தனது நண்பா்களை பாா்க்க என இருசக்கர வாகனத்தில் கழுவன்திட்டை பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்தாா். மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அப்பகுதியில் உள்ள ஒரு மதில் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜினை அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.