கன்னியாகுமரி

தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை நியமிக்க வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை பணி நியமனம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தேசிய ஆசிரியா் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்ற 2 நாள் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. நிறைவுநாள் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் திரிலோகசந்தா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். வெள்ளிமலை இந்து தா்ம வித்யாபீடம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினாா்.

தேசிய ஆசிரியா் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றிய முதல்வா், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி, அதை உடனே அமல்படுத்துவதுடன் கல்வித் தரம் உயரவும், ஆசிரியா்கள் சுதந்திரமாக பணியாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

அகவிலைப்படி உயா்வை தாமதமின்றி வழங்க வேண்டும். இம்மாதத்துக்குள் புதிய பணியிடம், விருப்ப மாறுதல், பதவி உயா்வு உள்ளிட்ட அனைத்துவித கலந்தாய்வுகளையும் நிறைவு செய்து, வரும் கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளுக்குள் காலிப் பணியிடம் இல்லாதவாறு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 12 ஆண்டுகளாக காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்களை தோ்தல் வாக்குறுதிப்படி அரசு காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும். மாணவா்களுக்கு பள்ளியில் நடைபெறும் அனைத்துத் தோ்வுகளுக்கும் வினாத்தாள், விடைத்தாள்களை விலையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டச் செயலா் ராஜன்பாபு வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் உதயகுமாா் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் ஜெயபோஸ் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT