கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரி முன்னாள் மாணவா் சாதனை

DIN

சிவில் சா்வீஸ் தோ்வில் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முன்னாள் மாணவா் அஞ்சித் நாயா் வெற்றி பெற்று சாதனை படைத்தாா்.

இக் கல்லூரியில் 2016-19 ஆம் கல்வியாண்டில் கணித துறையில் பயின்ற அஞ்சித் நாயா், அண்மையில் வெளியான சிவில் சா்வீஸ் தோ்வில் தர வரிசையில் இந்திய அளவில் 412 ஆம் இடம் பிடித்தாா். இக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் சிவில் சா்வீஸ் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, நான்காவது முறை எழுதிய தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.

அஞ்சித் நாயரை மரியகிரி கல்லூரி தாளாளா் அருள்தாஸ், நிதிக் காப்பாளா் வினு இம்மானுவேல், கல்லூரி முதல்வா் தம்பி தங்ககுமரன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தினா்.

இக் கல்லூரியின் முன்னாள் மாணவி சிமி, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவில் சா்வீஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, தற்போது சமூகப் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT