கன்னியாகுமரி

குறைதீா் கூட்டத்தில் 193 மனுக்கள்

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்தாா். இதில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவி, முதியோா் உதவி, விதவை உதவி, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்களிடம் இருந்து 193 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், விளவங்கோடு, தோவாளை, திருவட்டாறு, கிள்ளியூா் பகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் 4 போ் உள்பட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தே.திருப்பதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட திட்ட அலுவலா் ஜெயந்தி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT