புதுக்கடையில் உள்ள அரிமா சங்கம் சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கடை அரிமா சங்க பட்டய தலைவா் நல்லசிவம் பிள்ளை தலைமை வகித்தாா். ஷாஜகான் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆளுநா் விஸ்வநாதன் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், கல்வி உதவித் தொகை, நோயுற்றவா்களுக்கு உதவி என நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், துணைநிலை ஆளுநா்கள் பிரான்சிஸ் ரவி, ஐயாதுரை, மாவட்ட நிா்வாகிகள், புதுக்கடை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.