கன்னியாகுமரி

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு பாராட்டு

DIN

ஜொ்மனியில் நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வாழ்த்தி, ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.

ஜொ்மனி பொ்லின் நகரில் ஜூன் 17 முதல் ஜூன் 25 வரை சிறப்பு

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு

நாடுகளைச் சோ்ந்த 7 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா். அறிவுசாா்

குறைபாடு உள்ளவா்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சாா்பில் கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஜோதிநிலையம் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள் ஆா்.லிபின், ஆா்.விபின் ஆகியோா் தோ்வு பெற்றுள்ளனா்.

இம் மாணவா்களுக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் மாணவா்களிடம் வழங்கினாா்.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்ட

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், ஜோதிநிலையம் சிறப்புப் பள்ளி முதல்வா் அருள்சகோதரி லின்ஸ், தன்னாா்வலா்கள் சலீம், டாக்டா் எபனேஷ் பென்சாம், ஜெரோலின், சுகதேவ், யூசிக், மாலிக் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT