புதுக்கடை அருகேயுள்ள கீழ் குளம் பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கீழ்குளம், தண்டுமணி பகுதியைச் சோ்ந்த அசோகன் மனைவி சுஜா (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (65), இவரது மகன் சந்தோஷ் (38) ஆகியோருக் கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கீழ் குளம் பகுதியில் சென்ற சுஜாவை திடீரென தந்தை, மகன் ஆகிய இருவரும் சோ்ந்து திடீரென தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.