கன்னியாகுமரி

இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட இந்துமுன்னணி செயற்குழு கூட்டம், இரணியலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். நெல்லை கோட்ட செயலாளா் கண்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளா் அரசுராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், ஒடிஸா ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவிப்பது, பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக அமைச்சா் மனோதங்கராஜையும் அவா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையையும் கண்டிப்பது, திருவள்ளூா் மாவட்ட இந்துமுன்னணி தலைவா் பாடி சுரேஷ்குமாரின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் அவரது படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்துவது, கக்கோடு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT