களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மூலவருக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல, மேலும், திக்குறிச்சி மகாதேவா் கோயில், விளவங்கோடு திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில், குழித்துறை மகாதேவா் கோயில், பாறசாலை மகாதேவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.