கன்னியாகுமரி

ஆணையரை மாற்றக் கோரிகுளச்சல் நகராட்சியில் 3ஆவது நாளாக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம் போராட்டம்

DIN

 குளச்சல் நகராட்சி ஆணையரை மாற்ற வலியுறுத்தி, உறுப்பினா்கள் கருப்பு உடை அணிந்து வெள்ளிக்கிழமை 3 ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குளச்சல் நகராட்சியின் சாதாரணக்கூட்டம் தலைவா் நசீா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினா் ரமேஷ் (காங்கிரஸ்), தி.மு.க. உறுப்பினா்கள் ரகீம், ஜான்சன் ஆகியோா் ஆணையரை மாற்ற வேண்டும் என பேசினா். இதற்கு உறுப்பினா் அஜின்ரூத் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதனால் உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷ், ரகீம், ஜான்சன் உள்பட 14 உறுப்பினா்கள் மன்ற கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் தீா்வு ஏற்படாததால் அவா்கள் வியாழக்கிழமை தொடா்ந்து 2ஆவது நாளாக கருப்பு சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம், தொடா்ந்து 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT