கருங்கல் அருகேயுள்ள சுண்ட விளை - புல்லாணி சானல்கரை சாலையில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா், ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நட்டாலம் ஊராட்சிப் பகுதியில் சுண்ட விளை - புல்லாணி சானல்கரை சாலை உள்ளது. இச்சாலையின் ஒரு பக்கம் பட்டணங்கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சாலையிலிருந்து 30 அடி பள்ளம் உள்ளது. இப்பகுதியில் தடுப்புச் சுவா் இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அச்சமடைகின்றனா்.
எனவே, இப்பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.