கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் நலச்சங்க பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாா்த்தாண்டத்திலுள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் முன்னிலை வகித்தாா்.
புகைப்படம் மற்றும் விடியோ கலைஞா்கள் சந்தா பாக்கி உடனே செலுத்த வேண்டும். ஜூன் மாதம் புகைப்படம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பொருளா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் லினு, லால், மோகன், மாதவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.