கன்னியாகுமரி

பழுதடைந்த சாலையைசீரமைக்க வலியுறுத்தல்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள காக்கவிளையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட காக்கவிளை சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக காக்கவிளை சந்திப்பு பகுதிகளில் உள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, இச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT