கருங்கல் பகுதியில் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா்,திப்பிரமலை, மிடாலம், மேல்மிடாலம், மிடாலக்காடு, பாலப்பள்ளம், மத்திகோடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
மழை காரணமாக வெப்பம் வெகுவாகத் தணிந்தது.