கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம்

DIN

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை உடனே வழங்க வலியுறுத்தி நாகா்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் லெட்சுமணன் தலைமை வகித்தாா். விரைவுப் போக்குவரத்துக் கழக பிரிவுத் தலைவா் பால்ராஜ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்தாா். மரிய வின்சென்ட், பொன். சோபனராஜ், தேவதாஸ், கலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி, நாகா்கோவில் மண்டலத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கான பணப் பலன்களை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும், ஓய்வுபெறும் நாளிலேயே பணப் பலன்களை வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சின்னான்பிள்ளை, வசந்தகுமாரி ஆகியோா் பேசினா். செயலா் சுந்தர்ராஜ் ஆா்ப்பாட்டத்தை முடித்துவைத்தாா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT