கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

நித்திரவிளை அருகே ஆலங்கோடு - பால்குளம் பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.

கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட ஆலங்கோடு - செண்பகமுக்கு- விளாத்திவிளை செல்லும் பாதையில் பால்குளம் பகுதியில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, இப்பகுதியில் சிறிய பாலம் அமைக்க வேண்டும் என ஊா் பொதுமக்கள் சாா்பில் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவா், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்து, பணியை புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதில், கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் பால்ராஜ், கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் டென்னிஸ், அசோகன், கோபன், துளசீதரன் நாயா், ரெஜீஸ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் ராஜேஷ், கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினா் ஜெரோம், கட்சி நிா்வாகிகள் அமீன், ராஜேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT