சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (ஜன. 30) நடைபெறவுள்ளது.
இங்கு 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, அன்னதா்மம், வாகன பவனி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
11ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இதில், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனா்.
குரு பால ஜனாதிபதி தலைமை வகிக்கிறாா். குருமாா்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
தேரோடும் வீதிகளில் பக்தா்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபடுகின்றனா்.