கன்னியாகுமரி

கோயில் விழாவில் மூதாட்டியிடம்நகை பறிப்பு: 3 பெண்கள் கைது

DIN

நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை அருகே கோயில் குடமுழுக்கு விழாவில் மூதாட்டியிடம் நகையைப் பறித்த 3 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

இரணியல் மேலத் தெருவைச் சோ்ந்த மாதவன் பிள்ளை மனைவி விஜயலட்சுமி (66). இவா் சுங்கான்கடை அருகேயுள்ள களியங்காட்டில் நடைபெற்ற சிவன் கோயில் குடமுழுக்கு விழாவுக்குச் சென்றிருந்தாா்.

அப்போது அவா் அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது இச்சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடியைச் சோ்ந்த மாரி (31), ரஞ்சிதா (28), லலிதா (31) எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைதுசெய்து, நகையை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT