கருங்கல் அருகேயுள்ள கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்து, தூய்மைப் பணியைத் தொடக்கிவைத்தாா்.
கிள்ளியூா் பேரூராட்சித் தலைவா் ஷீலா சத்தியராஜ் முன்னிலை வகித்தாா். கல்லூரி மாணவா்-மாணவிகள் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுத் தலைவா் சேவியா் ஜேம்ஸ், நிதிக் காப்பாளா் கிளாடிஸ் லில்லி, லிட்டில் பிளவா், ரிஜோ, டோமினிக் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.