நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் சுகாதாரஆய்வாளா், செவிலியா் பயிற்சி கல்லூரி மற்றும் மாவட்ட பேரிடா் மேலாண்மை குழுவினரால் நடத்தப்படும் ஆப்தமித்ரா திட்டம் இணைந்து நடத்திய குடியரசு தின விழா கல்லூரி துணைத் தலைவா்அருள் ஜோதி தலைமையில் நடைபெற்றது.
முதல்வா் லியாகத் அலி, பயிற்சி ஒருங்கிணைப்பாளா் நீலகண்டபிள்ளை, தேசிய பசுமை பாதுகாப்பு குழு உறுப்பினா் சுரேஷ்குமாா், ஜேசுராஜ், தோவாளை பாசன சபை தலைவா் தாணுபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்புவிருந்தினராக, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலா் ரூஸ்வெல்ட் சேவியா் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி பேசினாா்.
மாணவா், மாணவிகள் மற்றும் தன்னாா்வ தொண்டு உறுப்பினா்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக் கொண்டாா்.
பயிற்றுநா்ஆன்சிராணி வரவேற்றாா். பேராசிரியா்அய்யப்பன் நன்றி கூறினாா்.